• May 19 2024

தனது மாமனாரிடம் வசமாகச சிக்கப் பார்த்த அர்ஜுன்- செம சந்தோஷத்தில் இருக்கும் வசு மற்றும் ராகினி - கோதை எடுத்த முடிவு

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோதைக்கும் நடேசனுக்கும் 60வது கல்யாணம் பண்ணுறதைப் பற்றி ராகினியும் அர்ஜுனும் வந்து பேசுகின்றனர். ஆனால் கோதையும் நடேசனும் இதுக்கு மறுப்புத் தெரிவித்து விடுகின்றனர். ராகினி எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும் கோதை அதெல்லாம் ஒன்றும் வேணாம் என்று சொல்லி விட்டு எழும்பிச் செல்கின்றனர்.


இதனால் கோபமடைந்த அர்ஜுன் தன்னுடைய மாமாவிடம் புலம்புகின்றார் எப்படியாவது அந்த பங்சனை நடத்தி நல்ல பெயர் எடுக்கலாம் என்று பார்த்தால் அவங்க எல்லாத்தையும் குழப்பிடுவாங்க போல இருக்கே, இருந்தாலும் எப்படியாவது இவங்களை சம்மதிக்க வைக்கனும் என்று பிளான் போடுகின்றார்.

தொடர்ந்து சரஸ்வதி மெக்கானிக் செட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் வந்து பைக் திருத்துகின்றார். சின்னப் பிழை தானே என காசு வாங்காமல் விட அந்தப் பெண் நீ நல்லா இருக்கனும் உனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்ல சரஸ்வதி சந்தோஷப்படுகின்றார். மறுபுறம் நடேசன் கோதையிடம் பேசிட்டு இருக்கும் போது போலீஸிடம் இருந்து போஃன் வருகின்றது.


இதனால் நடேசன் உடனே கிளம்பிச் சென்று அர்ஜுனிடம் பேசிய ரௌடியைப் பார்க்கச் செல்கின்றார்.ஆனால் அந்த ரௌடி வீட்டை காலி பண்ணி விட்டு போனதால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கிறார். அப்போது போலீஸ் இது பற்றி உங்க மாப்பிள்ளை கிட்டையே கேட்கலாமே என்று சொல்ல. இல்ல இதைக் கேட்ட என் பொண்ணு த்பா நினைப்பா, ஆதாரம் இல்லாமல் கேட்கக் கூடாது என்று சொல்கின்றார்.

பின்னர் வீட்டில் நமச்சியும் தமிழும் பேசிட்டு இருக்கும் போது சரஸ்வதி வருகின்றார். சரஸ்வதி பைக் திருத்தும் போது அந்தப் பெண் சொன்ன விஷயத்தைச் சொல்கின்றார். இதைக் கேட்டு தமிழும் நமச்சியும் சந்தோசப்படுகின்றனர். அத்தோடு நமச்சி கண்டிப்பா இந்த வருஷம் உங்களுக்கு குழந்தை பிறக்கும் நான் அந்தக் குழந்தையை துாக்கிட்டு தான் திரியப் போகின்றேன் என்று சொல்லி சந்தோஷப்படுகின்றார்.

அடுத்து ராகினியும் அர்ஜுனும் வசுவையும் கார்த்திக்கையும் அழைத்து 60வது கல்யாணம் பண்ணுறதை பற்றி பேச கார்த்திக் அதெல்லாம் வேணாம் என்று சொல்ல வசு இந்த பங்சன் கட்டாயம் நடக்கணும் என்று சொல்கின்றார்.மறுபுறம் கோதையிடம் நடேசன் அந்த ரௌடி தப்பிச்சு போனதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது கார்த்திக் அழைக்கின்றார்.


பின்னர் கோதையிடமும் நடேசனிடமும் இந்த விஷயத்தை வசு சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த கோதை பின்னர் 60வது கல்யாணம் செய்ய ஓகே சொல்கின்றனர். இதனால் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். வசு இந்த பங்சனுக்கு தமிழ் மாமாவையும் வர வைக்கணும என்று தனது மாமனாரிடம் தனியாகச் சொல்கின்றார். அடுத்து தமிழும் சரஸ்வதியும் செக்கப்புக்க போகின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement