• May 03 2024

பாக்கியாவை இன்னும் லவ் பண்ணிட்டு இருக்கிறீங்களா?- கோபியிடம் நேராகக் கேட்ட ராதிகா- ஜெனி முன்னாடி செழியனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

செழியன் தன்னுடைய சட்டையைப் பிடித்து அடிக்க நினைத்ததை நினைத்து கோபி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ராதிகா  நானே உங்க கிட்ட கேட்கணும் என்று இருந்தேன். பாக்கியா யார் கிட்டை பேசினாலும் உங்களுக்கு என்ன எதற்காக கோபம் வரணும் என்று கேட்க, கோபி அது எப்படி கோபம் வராமல் இருக்கும் முதல் எல்லாம் சமையல் மிளகாய்த்துாள் அப்பிடினு வீட்டுக்குள்ளையே இருந்தா இப்போ எல்லாம் மாறி சந்தோஷமா இருக்கிறா என்று கேட்கிறார்.


அதற்கு ராதிகா உங்க வீட்டில இருக்கிறவங்க எல்லோரும் பாக்கியாவின் ரசிகர் மன்றத்தில இருக்கிறவங்க, ஆனால் நீங்க தான் அந்த ரசிகர் மன்றத்தோட தலைவர் என்று சொல்ல கோபி அப்பிடி இல்லை, அவள் எவ்வளவு தப்பு பண்ணுறா அதை யாருக்கும் தெரிய மாட்டிங்குது நான் பண்ணுறதை மட்டும் தான் கேட்கிறாங்க அது தான் எனக்கு கோபம் வருது என்று சொல்கின்றார்.

இருந்தாலும் ராதிகா பாக்கியா மீது உங்களுக்கு இன்னும் லவ் இருக்கு போல அதான் உங்களுக்கு கோபம் வருது என்று சொல்ல, கோபி சீச்சீ அப்பிடி இல்லை வாயைக் கழுவு என்று சொல்கிறார். இதற்கு ராதிகா எனக்காக தானே கீழே பேசப் போனீங்க . அங்க போய் எதுக்கு பாக்கியாவை பற்றி மட்டும் பேசிட்டு இருந்திங்க. மரியாதையா உங்க அம்மாட்டை போய் என்னைப் பற்றி மட்டும் பேசுங்க என்று சொல்லி விடட செல்கின்றார்.


தொடர்ந்து கோபி சொன்னதை நினைத்து பாக்கியா வருத்தப்பட்டுக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்கியாவை ஆறுதல் படுத்துகின்றார். பின்னர் பாக்கியா செழியன் கிட்ட போய் நிற்க செழியன் அம்மா நான் உன் கூட சண்டை போடுவேன். ஆனால் யாருக்கும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என சொல்ல எழிலும் வந்து பாக்கியாவை ஆறுதல் படுத்த பாக்கியா இருவரையும் கட்டிப்பிடித்து சந்தோஷப்படுகின்றார்.

தொடர்ந்து ரூமுக்குள் போனதும் ஜெனியும் செழியன் செய்த காரியத்தை சொல்லி சந்தோஷப்படுகின்றார். ஜெனியும் செழியனும் பேசிட்டு இருக்கும் போது ஆபிஸ்ல இருந்து செழியனுக்குக கடலை போடும் பெண் எடுத்து செழியன் கிட்ட பேச செழியன் என்ன சொல்வது என்று தெரியாமல் சமாளித்து பேசுகின்றார்.செழியன் பேசட்டும் என்று ஜெனி படுத்துத் துாங்குகின்றார்.


தொடர்ந்து விடிந்ததும் எழில் இருக்க பாக்கியாவும் செல்வியும் சமைக்க, அப்போது செல்வி எழிலிடம் ஒரு கதை சொல்லுறேன் படமாக எடுக்கிறீங்களா எனக் கேட்டு தன்னுடைய கதையை சொல்கின்றார். இதைக் கேட்டு பாக்கியா சிரிக்க அந்த நேரம் ராதிகா வந்து காபி வைக்கிறார். மேலும் பாாக்கியாவிடம் நேற்று நடந்தது எதிர்பார்க்கல தானே எனச் சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement