• May 08 2024

என்னது விரைவில் திருமணமா?.. காதலை உறுதி செய்த பிறகு மனம் திறந்த நடிகை தமன்னா..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதலில் தமிழில்தான் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். விஜய், அஜித், தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கலக்கினார். அதன் பிறகு தெலுங்குக்கு சென்ற அவர் அங்கும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து லீடிங் ஹீரோயினாக மாறினார்.

பாலிவுட்டுக்கு சென்ற அவர் ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது  இது தவிர தமன்னா நடிப்பில் ஜீ கர்தா வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. அதில் ஓவர் க்ளாமராக நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரி2வில் நடித்தபோது விஜய் வர்மாவுக்கும், தமன்னாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

'லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோதுதான் எனக்கும் விஜய் வர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. நான் எதிர்பார்த்த நபர் போலவே அவர் இருந்தார். உடன் நடிக்கும் நடிகரை காதலிப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை' என கூறி தனது காதலை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் காதலை உறுதிப்படுத்திய பிறகு திருமணம் குறித்து பேசியிருக்கிறார் தமன்னா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், " பத்து வருடங்கள் நடித்தால் போதும் என்ற மனநிலையில்தான் நான் நடிக்க வந்த புதிதில் இருந்தேன். 30 வயதில் திருமணம் ஆகி குழந்தை இருக்கும் எனவும் நினைத்தேன். ஆனால் இப்போதோ 30 வயதை தாண்டியும் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன்.

பொறுப்பு தேவை: திருமணம் செய்வதற்கு சில பொறுப்புகள் தேவை. அதற்கு எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். அதனால் திருமணத்திற்கு தயாராக இருக்கிறேன் என எப்போது நான் உணர்கிறேனோ அப்போது திருமணத்தை செய்துகொள்வேன்" என கூறியருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement