• May 19 2024

திருமணம் நடக்காமல் இருக்க இவர்கள் தான் காரணமா ? உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

இப்படத்தைத் தொடர்ந்து அஜித், விஜய், விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இறுதியாக இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த லாபம் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதனிடையே நடிகை சுருதி ஹாசன் அவர்கள் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். மேலும் இது ஸ்ருதி ஹாசன் அப்பா கமல்ஹாசனுக்கும் தெரியும். அதுமட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், ஸ்ருதி ஹாசன் அதனை மறுத்தார். இதன் பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்து இருந்தார். மேலும், ஸ்ருதி காதலை முறித்துக்கொண்டு பிரிந்த மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்தார்.

ஆனால், காதலை பிரிந்த சுருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்தார். எனினும் இதனை அடுத்து ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் அவருடன் தான் ஸ்ருதி ஹாசன் ஒன்றாக வசித்து வருகிறார். சாந்தனு மும்பையை சேர்ந்தவர். இவர் பிரபல டூடுல் கலைஞர் ஆவார். இவர்கள் இருவருமே தாங்கள் காதலிப்பதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்து இருந்தார்கள். இது குறித்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் பல கேள்விகள் எழுப்பி இருந்தார்கள்.

மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை எல்லாம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் பலரும் இவர்களின் திருமணம் குறித்து பல கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய காதலனை திருமணம் செய்யாதது ஏன்? என்பது குறித்த கேள்விக்கு தற்போது ஸ்ருதிஹாசன் கூறியிருப்பது, எனக்கு திருமணத்தின் மீது பயமாக இருக்கிறது. அதனால் தான் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. எனது அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது.

எனினும் இதன் காரணமாகத் தான் நான் யோசிக்கிறேன் என்று அர்த்தமில்லை. திருமணம் என்கிற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. பயம் மட்டுமே இருக்கிறது. அதனால் திருமணம் பந்தம் குறித்து நான் நிறையவே யோசித்து வருகிறேன். இருப்பினும் சாந்தனு என்னுடைய வாழ்க்கைக்கு வந்தவுடன் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நிறைய விசயங்கள் ஒத்துப்போகிறது. நான் இப்போது ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் உங்கள் அப்பா அம்மா கூட உங்கள் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டார்கள் என பதிவிட்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement