• May 08 2024

"மாமியார் நல்லாயிருக்காங்களா"… ராமரை பார்த்துக் கேட்ட சிவகார்த்திகேயன்… விழுந்து விழுந்து சிரித்த பிரபலங்கள்…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று வெள்ளித்திரையிலே முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார். இவரின் நகைச்சுவை கலந்த நடிப்பிற்கு சிறியோர் முதல் பெரியோர் வரை பலரும் அடிமையாக இருக்கின்றனர்.

இவ்வாறாக இன்று பிரபல நடிகராக இருந்தாலும் மக்கள் மத்தியில் இவருக்கான அறிமுகத்தை கொடுத்தது விஜய் தொலைக்காட்சியே ஆகும். சிவகார்த்திகேயன் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட் ஆக வர தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் இடம்பெற்ற குக் வித் கோமாளியை தொடர்ந்து தற்போது அவர் KPY சாம்பியன்ஸ் ஷோவின் பைனலுக்கு வந்திருக்கிறார்.

அவர் KPY Champions செட்டுக்கு வந்ததும் அவர் ஜட்ஜாக இருக்கும் அர்ச்சனாவை தான் கலாய்த்து இருக்கிறார். ஆக இருப்பவர் அவர் என கிண்டலடித்து இருக்கிறார்.

அதில் இவர் பேசும் போது "ஆங்கருக்கு எல்லாம் அதிபதி அர்ச்சனா அக்காவே, ஒளவையார் காலத்தில் இருந்து ஆங்கராக இருக்கின்றார்" எனக் கிண்டலாக கூறியிருக்கின்றார். இதற்கு அங்கிருந்த ரோபோ சங்கர் "தமிழ்நாட்டு ஷாருக்கான் சிவகார்த்திகேயனே" எனப் பதிலுக்கு அவரைக் கலாய்த்து இருக்கின்றார். அத்தோடு தொடர்ந்து பேசுகையில் நம்ம சிவகார்த்திகேயன் "புகழ் டெய்லி 2 கையெழுத்து போட்டி விட்டுத்தான் வாராரு" எனக் கூறி சிரித்திருக்கின்றார்.

மேலும் "ராமர் தான் காமெடி செய்யும்போது டைலாக்கை மறந்துவிடுவது போல அடிக்கடி செய்கிறார், உண்மையிலும் மறக்கிறாரா அல்லது நடிக்கிறாரா தெரியல" என ராமரை பார்த்து கூறியிருக்கார். இதற்கு ராமர் கூறிய பதிலைக் கேட்ட சிவகார்த்திகேயன் உடனே "நான் என்ன வெளியாள் என நினைச்சிட்டீங்களா?, எனக்கு ஒன்னும் தெரியாதா? எனப் பதிலுக்கு அவரை கலாய்ச்சு இருக்கின்றார். அதுமட்டுமன்றி "உங்க மாமியார் நல்லா இருக்காங்ககளா என ராமரிடம் கேட்கிறார். உடனே அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது. சிவகார்த்திகேயனின் இந்த நகைச்சுவை கலந்து வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement