• May 05 2024

ஹிந்தி மொழி பேசுபவர்கள் மட்டும் தான் நல்லவர்களா?- சுகாசினியின் பதிலால் கடும் கோபத்தில் பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகாசினி. இவர் பிரபல இயக்குநரான மணிரத்னத்தின் மனைவி என்பதும் யாவரும் தெரிந்ததே. இந்த நிலையில் இவர் பதிவிட்ட கருத்து ஒன்று ரசிகர்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது.

அதாவது ஹிந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று நடிகர் அஜய் தேவ்கான் கூறியதால் தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. இந்த நிலையில் திடீரென, ‘மக்கள் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் சுகாசினி தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு கூறியதை அடுத்து தமிழ், கன்னட ,மலையாள மொழி பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? என சுஹாசினியிடம் கேட்க வேண்டும் என்றும் ஹிந்தி மொழி பேசத் தெரியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறு என்கிறார்கள் சிலர், முதலில் என் நாட்டிலிருந்து நீ வெளியேறு என வட சென்னை பட நடிகர் அமீர் கூறினார்.

ஹிந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று கூறிய சுகாசினி தமிழ் மொழி பேசுபவர்கள் நல்லவர்கள்தான் என்று கூறியதை கவனிக்காமல் அமீர் இவ்வாறு விமர்சனம் செய்வதாக நெட்டிசன்கள் அவரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement