• May 04 2024

பிரபல இயக்குநரை கதறி அழ வைத்த ஏ.ஆர்.ரகுமான் - நடந்த சம்பவம் என்ன தெரியுமா?

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் "ரோஜா" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என உலக அளவில் பிரபலமானவர்.

"ரோஜா" படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். தற்போது இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை என சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களை அழ வைத்ததாக தகவல் வந்துள்ளது. இது பம்பாய் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்துள்ளது. இது குறித்து இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியுள்ளார்.

அதில், "பம்பாய் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு ஷூட் தொடங்கவுள்ள நிலையில் இசை தயாராக வில்லை. ஆனால் மறுநாள் ஷூட் தொடங்க வேண்டும் என்பதால் அன்று மலையில் ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றபோது டியூன் கிடைக்கவில்லை என்று ரஹ்மான் கூறினார்".

"இதனால் இயக்குநர் மணிரத்னம் மிகுந்த கோபம் கொண்டார். அந்த சமயத்தில் ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் வேற ஒன்று உள்ளது என குறி பம்பாய் படத்தின் தீம் மியூசிக்கை இசைத்தார். இதை கேட்ட மணிரத்னம் கண்ணீருடன் "என்ன செய்திருக்கிறீர்கள் ரஹ்மான்? உங்களை படத்தை விட்டு தூக்க நினைத்தால் நீங்கள் என்னை அழ வைத்துவிடீர்கள்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement