• May 06 2024

த்ரிஷா வாழ்வில் இன்றைய நாளில் நடந்த மறக்க முடியாத மற்றொரு சம்பவம்... பூரித்துப் போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி வகிக்கின்ற பெண் நட்சத்திரங்களில் எப்போதுமே டாப்பில் உள்ள ஒருவர் என்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா.

இவர் 1999-ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடித்த 'ஜோடி' என்ற திரைப்படத்தின் வாயிலாக துணை நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர்.


அதனைத் தொடர்ந்து 2002-ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால் த்ரிஷாவின் சினிமா பயணம் ஓஹோ என்ற அளவிற்கு சூப்பராக வளரத் தொடங்கியது. 


அந்தவகையில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார். இவ்வாறாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற த்ரிஷா நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற பிரம்மாண்ட படமானது வெளியாகி இருக்கின்றது. இதற்கு ரசிகர்கள்பலரும் சிறந்த விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.


அதிலும் த்ரிஷாவின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றது. அதாவது இப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் 1999-ஆம் ஆண்டு செப்டெம்பர் 30-ஆம் திகதி 'மிஸ் சென்னை' என்ற அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். 


அதேநாளான இன்றைய தினம் (2002-09-30) குந்தவையாக இவர் நடிப்பில் உருவான பிரமாண்டமான திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' வெளியாகி இருக்கின்றது.

எனவே இந்த நாளானது த்ரிஷாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement