• May 18 2024

சிபியுடன் இணைந்து அதிகாலை 2 மணிக்கு ஆன்ட்ரியா செய்த செயல்…ஏம்மா வேற நேரமே கிடைக்கலயா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அழகுக்குப் பேர் போனவர் என்றால் அது நம்ம ஆன்ட்ரியா தான். இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த பின்னணிப் பாடகியாகவும் இருந்து வருகின்றார். இந்தியத் திரையுலகில் இவர் ஆரம்பத்தில் ஒரு பாடகியாகவே காலடி எடுத்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களில் நடித்தார்.

இப்படங்களில் இவர் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இவற்றைத் தொடர்ந்து பல பட வாய்ப்புக்களும் இவரிற்கு வந்து குவியத் தொடங்கின. அந்தவகையில் 'விஸ்வரூபம்', 'மங்காத்தா', 'அரண்மனைக்கிளி', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இவரது நடிப்பிற்கு மட்டுமன்றி கவர்ச்சியான அழகிற்கும், வசீகரமான குரலிற்கும் மயங்காதவர்களே இல்லை என்று கூற முடியும். அந்தளவிற்கு காந்தக் குரலினைக் கொண்ட நடிகையாகவும் வலம் வருகின்றார். பாடகியாக அறிமுகமாகிய இவர் தன்னுடைய கடின உழைப்பினால் இன்று சினிமாவில் பிஸியான ஒரு முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

இவ்வாறாக படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற ஆன்ட்ரியா தற்போது நடிகர் சிபியுடன் இணைந்து 'வட்டம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து அதுல்யா ரவியும் நடித்திருக்கின்றார். இப்படத்தினுடைய இறுதிக்கட்டப் பணிகள் யாவும் நிறைவுபெற்று தற்போது புரொமோஷன் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறாக சமீபத்தில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் நடிகை ஆன்ட்ரியா பேசிய ஒரு விடயமானது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

அதாவது இவர் 'வட்டம்' படத்தினுடைய படப்பிடிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஒருநாள் அதிகாலை இரண்டு மணிக்கு கதாநாயகன் சிபியுடன் இணைந்து ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்ததாக சிரிப்பினை அடக்க முடியாத வகையில் அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

அதுமட்டுமன்றி அந்த ஹோட்டலில் தாங்கள் இருவரும் இணைந்து அந்த நேரம் பரோட்டாவும், கலக்கியும் சாப்பிட்டிருந்ததாகவும் கூறியிருந்தார். அத்தோடு தாங்கள் இருவரும் நல்ல ஜாலியாகவே சூட்டிங் வந்து போனதாகவும் கூறியிருக்கின்றார். இதைக் கேட்டு அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்த அனைவருமே சிரித்திருந்தார்கள்.

இவர் இவ்வாறு கூறியதைக் கேட்ட ரசிகர்கள் ஏம்மா சாப்பிடுறதற்கு ஒரு நேரம் காலம் இல்லையா எனக் கலாய்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement