• May 04 2024

எல்லோருமே ஒரிஜினல் நகை போட்டு தான் நடிச்சோம்- நடிகர் சரத்குமார் கூறிய சுவாரஸியமான விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள புராணக் கதை தான் பொன்னியின் செல்வன்.இப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் படத்தின் ரிலீஸிற்காக ஒட்டு மொத்த திரையுலகமே காத்திருக்கின்றது.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். 


 சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷன் விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சரத்குமார், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர், நடிகையர்  அனைவரும் ஒரிஜினல் நகைகளை அணிந்துகொண்டு நடித்ததாக பேசியுள்ளார். 


 மிகப்பெரிய படம், நீண்ட நாள்கள், அதிக நேரம் ஷூட்டிங் இருக்கும்.. எனவே ஆபரணங்களால் அலர்ஜி உண்டாகலாம் என்பதால், அனைவருக்கும் தங்கம் என்றால் தங்கம், வைரம் என்றால் வைரம், ரூபி என்றால் ரூபி என ஒரிஜினல் ஆபரணங்களையே இப்படத்தில் நடிகர்கள் அணிந்து நடித்ததாக கூறியுள்ளார்.இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement