• May 03 2024

அடடே நம்ம அனுஷ்காவிற்கா இந்த நிலைமை; இப்படி ஆகிட்டீங்களேம்மா

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழில் பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவருக்கு தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

அறிமுக படைத்தத் தொடர்ந்து இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவற்றுள் பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறி வெற்றி பெற்றன.

இவர் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். அது மட்டுமல்லாது அவருடைய உயரமும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர பட வாய்ப்புகளும் வந்து குவிந்த வண்ணமே இருந்தன.

இந்த நிலையில் 35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ரசிகர்கள் மத்தியில் அமுல் பேபியாக, நீங்கா இடம்பிடித்து வந்த அனுஷ்காவிற்கு தற்போது சிலகாலமாக படவாய்ப்புக்கள் சரிவர கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மறுபடியும் ஒல்லியாக மாறிவிட்ட நடிகை அனுஷ்கா தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப்படத்தில் அனுஷ்காவை விட வயது குறைந்த ஒரு புதுமுக ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்தின் உடைய கதையானது ஒரு இள வயது வாலிபன் தன்னை விட வயது கூடிய பெண்ணை காதலிப்பதை மையமாகக் கொண்டு அமைந்து இருக்கின்றது. இவ்வாறு அனுஷ்கா இள வயது வாலிபருடன் நடிப்பதற்கு காரணம் இவருக்கு சரியாக பட வாய்ப்புக்கள் அமையாமையினாலே ஆகும்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவிற்கா தற்போது இந்த நிலைமை எனப் பலர் கூறி வரினும், இப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு அதிகளவான படவாய்ப்புக்கள் வந்து குவியும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement