• May 10 2024

ஐயோ ராமா.. இனி இவங்க தொல்லை தாங்க முடியாது.. கார்த்தி, த்ரிஷாவை மீம்ஸ் போட்டு கலாய்த்த ப்ளூ சட்டை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி கல்கியினால் புனையப்பட்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. 


இப்படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்தோடு இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்று சாதனை படைத்தது வருகின்றது. 


இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கார்த்தி மற்றும் த்ரிஷாஇருவரும் நேற்றைய தினம் ட்விட்டரில் வித்தியாசமான முறையில் ஒருவருக்கொருவர் செய்தி அனுப்பி ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் த்ரிஷா கார்த்தியின் கான்வெர்சேஷனை பார்த்த பிரபல இயக்குநரும் யூட்யூப் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் மீம்ஸ் போட்டு அவர்களை தாறுமாறாக கலாய்த்துள்ளார். அதில் படம் ரிலீஸ் வரைக்கும் இவங்க தொல்லை தாங்க முடியாதே என குறிப்பிட்டு கவுண்ட மணி அய்யோ... ராமா என தலையில் கை வைத்திருக்கும் மீம்ஸை ஷேர் செய்துள்ளார்.


ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் பலரும் 'இப்போ அவங்க தொல்லை, படம் ரிலீஸ் ஆன பிறகு உங்கள் தொல்லை தாங்கேலாது" என பதிலுக்கு அவரைக் கலாய்த்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement