• May 03 2024

மோடியின் நண்பருடன் இணைந்து தரமான சம்பவம் செய்யும் அஜித்.. ஆச்சரியத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது தொட முடியாத அளவிற்கு உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித், ஆரம்பத்தில் இருந்தே அரசியலை அறவே ஒதுக்க கூடியவர். 

தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஆக எம்ஜிஆர், சிவாஜி காலக்கட்டத்தில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரபலமானவர்தான் நடிகர் ஜெய்சங்கர். இவருடைய மூத்த மகன் விஜய் சங்கர் கண் மருத்துவராக உள்ள நிலையில், இளையமகன் சஞ்சய் சங்கர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

விஜய் சங்கர் சினிமாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் இலவசமாக சிகிச்சை செய்து வருகிறார். அது மட்டுமல்ல இவர் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு முகாம் மூலம் இலவச சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். இதனால் இவருடைய மருத்துவமனைக்கு வருபவர்கள் மேல்சிகிச்சைக்காக பணம் இல்லை என திரும்பி சென்றால், அவர்களுக்கு தன்னுடைய சொந்த செலவிலேயே இலவசமாக சிகிச்சை அளிப்பாராம்.

இதை கேள்விப்பட்ட அஜித் இவரை சந்தித்து இவருடன் நண்பராக இருந்து வருகிறார் மற்றும் இவர் செய்யும் உதவிகளுக்கு அஜித் பண உதவிகளை கொடுத்து வருகிறார். எவ்வளவு பணமாக இருந்தாலும் உடனே கேளுங்கள் நான் செய்கிறேன் என்று அந்த வார்த்தையையும் அஜித் கூறி இருக்கிறார். 

மேலும் நடிகர் அஜித் தான் விஜய் சங்கரை மோடிக்கு அறிமுகப்படுத்தினார். இதனால் மோடிக்கும் விஜய் சங்கர் மிகவும் நெருக்கமானவர். மோடி சென்னை வந்தாலே இவரை கூப்பிட்டு சந்திக்கும் அளவிற்கு புகழ் பெற்றவர். காரணம் விஜய் சங்கர் செய்யும் உதவி அவருடன் அஜித்தும் சேர்ந்து பல வருடங்களாக யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் உதவிகளுக்கு பணம் கொடுத்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

 மோடியின் நண்பரான விஜய் சங்கருடன் கைகோர்த்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை வழங்குவதற்காக கட்டு கட்டாக பணத்தை கணக்கு பார்க்காமல் கொடுக்கும் அஜித்தை பலரும் பாராட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement