• May 13 2024

’லால் சலாம்’ தோல்வியால் ஆவேசமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. அடுத்த படத்தின் நாயகன் இவர்தான்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்தலால் சலாம்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தின் தோல்வி காரணமாக மிகுந்த வருத்தத்தில் உள்ளார் என்றும் தான் இயக்கிய இரண்டு படங்களில் கிடைத்த பெயரை இந்த ஒரு படத்தில் கெடுத்துக் கொண்டதாக அவர் எண்ணுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாகலால் சலாம்திரைப்படத்தில் தனது அப்பா ரஜினியை நடிக்க வைத்தது தவறு என்றும் அவர் நடித்ததால் தான் இந்த படம் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதன் பின்னர் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்ததாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.



எனவே தனது அடுத்த படத்தில் ரஜினிகாந்தின் இல்லை என்பதை உறுதி செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஒரு கதையை எழுதியிருப்பதாகவும், தற்போது திரைக்கதை அமைத்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சித்தார்த் அவர் கூறிய கதையை கேட்டு தான் யோசித்து சொல்வதாக கூறியிருப்பதாகவும் தெரிகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியலால் சலாம்தோல்வி காரணமாக சித்தார்த்  அவருடைய படத்தில் நடிக்க தயங்குவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் சொன்ன கதை தனக்கு பிடித்து விட்டதால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை சித்தார்த் நடிக்கவில்லை என்றால் புது முகத்தை வைத்து இந்த படத்தை இயக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தில் தான் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ஆவேசமாக அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement