• May 19 2024

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் புதிய ரூல்ஸ் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்....கண்கலங்கி அழுத ரச்சிதா..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் 80வது எபிசோட்டில் என்ன நடந்தது என்ன என்பதை பார்ப்போம்..

21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமான பிக்பாஸில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்திருந்தனர்.இவ்வாறுஇருக்கையில் நேற்றைய எபிசோட்டில் முதன் முதலாக ரச்சிதாவின் அம்மா தான் முதன் முதலில் வந்து இருந்தாங்க.

அப்போது அம்மாவை பார்த்ததுடன் கட்டியணைத்து கண்கலங்கி அழுதார்.அதன் பிறகு அவர் வீட்டில் வளர்க்கும் பூனைக்குட்டியின் புகைப்படத்தை கொடுக்கும் போது அதற்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி அழுதார்.அதன் பிறகு அம்மாவின் மடியில் படுத்துறங்கி தான் நல்லா விளையாடுறனா என்று எல்லாம் கேட்டு அழுகின்றார்.

வருகிற எல்லோரும் விக்ரமன் மற்றும் அசீம் எல்லோரையுயும் பார்த்து பேசுகின்றார்.அதன் பிறகு மனிகன்டன் வீட்டில் இருந்து அவரின் அம்மா மனைவி மற்றும் அவரது அம்மாவும் வந்தார்கள்.அதன் பிறகு மணிகன்டனின் சகோதரியும் பிரபல நடிகையுமான ஜஸ்வர்யாவும் வந்து கொண்டு இருந்தார்.அப்போது அவர்களுடன் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "நீங்க என்னதான் சண்டை போட்டாலும் சாப்பிடும் போது ஒன்னா இருக்கணும்ன்னு ஒரு ரூல்ஸ் போட்டுக்கோங்க" என்கிறார்.

அதற்கு பதில் சொல்லும் ஹவுஸ்மேட்ஸ், ரூல்ஸ் போடவே ஒரு சண்டை நடக்குமே என ஜாலியாக அவரை கலாய்க்கின்றனர். அதன்பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது அம்மா, மணிகண்டன் ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆட, பிக் பாஸ் போட்டியாளர்களும் ஆட்டம் போடுகின்றனர்.

அதன் பிறகு ADKயின் அப்பா மற்றும் அவரது அம்மாவும் வந்து இருந்தார்கள்.அவர்களும் எல்லோரிடமும் கதைத்தார்.அதன் பிறகு ரச்சிதா மைனா நந்தினியிடம் i love you சொல்லிட்டு இருக்கும் போது அதனை லுப்ல போட்டுவிட்டார்.அதன் பிறகு மைனா நந்தினி வீட்டில் இருக்கிற எல்லோரையும் கூட்டிட்டு வந்து ரச்சிதா முன் விட்டு i love you  சொல்ல வைத்தார்.

இவ்வாறாக எபிசோட் முடிவடைந்த நிலையில் இதன் பற்றிய முழுவிபரத்தையும் அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்யவும்....






Advertisement

Advertisement