• Apr 27 2024

காதலித்து கழட்டி விட்ட ஐஸ்வர்யா ராய்... வீட்டிற்கு தேடிச் சென்று கொடுமைப் படுத்திய பிரபல நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'இருவர்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இத்தம்பதியினருக்கு 2011 ஆம் ஆண்டு ஆராதரனா பச்சன் என்ற மகளொருவர் பிறந்தார். அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆவதற்கு முன் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் ஒரு சில நடிகர்களை காதலித்துள்ளார். 


அந்த வரிசையில் நடிகர் சல்மான் கானையும் ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.அதாவது 1999-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'சஞ்சய் லீலா பன்சாலி' என்ற படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். அந்த சமயத்தில் தான் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகின்றது. 


ஆனால் இந்த காதல் நீண்டகாத்திற்கு நுழைக்காமல் ஒரு சில வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணம் சல்மான் கானின் கோபம் தான் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இவ்வாறான கருத்து வேறுபாடுகளால் இவர்களின் காதல் உறவு முடிவுக்கு வந்த பிறகும், சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் செல்லும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பல்வேறு பிரச்சனைகளை செய்து வந்தாராம்.


அதுமட்டுமல்லாது ஐஸ்வர்யா ராயின் வீட்டிற்கே சென்று அவர் உள்ளே அழைக்கும் வரையிலும் கதவை விடாது தட்டிக் கொடுமைப் படுத்துவாராம். இவ்வாறு ஐஸ்வர்யா ராய் சல்மான்கானால் பல பிரச்சனைகளை சந்தித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement