• Apr 25 2024

மீண்டும் பாலிவுட் நடிகரை இயக்கப் போகும் அட்லீ.. அட கதைக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு தொடர்பா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் அட்லீ. தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகரகளிடமிருந்து பாராட்டுகளை பெற்ற இவர் அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து 'தெறி, மெர்சல்' மற்றும் 'பிகில்' என 3 படங்களை இயக்கி முன்னணி இயக்குநர் என்றளவிற்கு உயர்ந்திருக்கின்றார். 


அதன் பின்னர் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகின்றார்.  மேலும் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் யோகி பாபு எனப் பலரும் நடித்து வரும் இப்படத்தில் விஜய் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் கேமியோ ரோலில் வர உள்ளதாக தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன.


மேலும் ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜவான் படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லீ இயக்கப் போகிறார் எனவும் ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.


ஆனால் விஜய் தற்போது தளபதி 67 இல் பிசியாக இருப்பதால் அட்லீயின் அடுத்த படமும் பாலிவுட்டில் தான் எனக் கூறப்படுகின்றது. அதாவது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் இந்தி ரீமேக்கை தான் அடுத்து அட்லீ பாலிவுட்டில் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 


இவ்வாறு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்த தெறி படத்தை அட்லீ இந்தியில் ரீமேக் செய்வது உறுதியானால் அந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கப் போவதாகவும் அதேபோல் ஹீரோயினாக சமந்தாவே நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தான் விரைவில் அட்லீயின் அடுத்த பட அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement