• May 07 2024

மீண்டும் வில்லி ஹாரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்? அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

Jo / 10 months ago

Advertisement

Listen News!

இந்தியாவிலிருந்து எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் இந்தியர்கள் மனதில் உலக அழகி என்றவுடன் முதலில் நியாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை தவிர்த்து இந்திய அரசு சார்பில் அவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது.

 ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக டாப் நடிகையாக உயர்ந்தார்

தமிழில் அறிமுகமானாலும் கோலிவுட்டில் செலக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் வில்லியாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவி பிரபலமான இயக்குநர் பிரசாந்த் நீல். அவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவிருக்கிறதாம். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement