• May 07 2024

பாக்கியலட்சுமி சீரியல் எழிலைத் தொடர்ந்து ஜெனியும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்குகின்றாரா?- அவரே கூறிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் திவ்யா கணேஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்கிற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் செம்பருத்தி என்கிற கேரக்டரில் நடித்த இவர் பின்னர் லட்சுமி வந்தாச்சு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையடுத்து இவர் நடித்த சுமங்கலி தொடர் தான் திவ்யாவை பேமஸ் ஆக்கியது. அந்த சீரியலில் அனு சந்தோஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்யா. பின்னர் 2022-ம் ஆண்டு விஜய் டிவியில் ஆரம்பமான பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கத் தொடங்கினார் திவ்யா கணேஷ். இந்த சீரியலில் ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சீரியலைத் தவிர படங்களிலும் நடித்திருக்கிறார் திவ்யா. குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த அட்டு என்கிற படத்தில் திவ்யா நடித்திருந்தார். இப்படம் பெரியளவில் வெற்றியடையாததால், சீரியலிலேயே கவனம் செலுத்த தொடங்கிய திவ்யா, தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஃபேன்ஸ் மீட் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை திவ்யா கணேஷ், விமானத்தில் பயணிக்கும் போது தனது ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஒரு விடயம் பேசியிருக்கிறார். அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் வரும் ஜெனி காரெக்டருக்கு சுத்தமா சமைக்க தெரியாது.ஆனால் எனக்கு சூப்பராக சமைக்க தெரியும். எல்லாமே நல்லா சமைப்பேன் என்று தெரிவித்தார்.


அப்போது தொகுப்பாளர் அப்போ அடுத்த முறை குக்வித் கோமாளியில் பங்குபற்றுவீர்களா என்று கேட்ட போது அவர் சிரித்து சமாளித்து விட்டார். இதனால் விஷாலைத் தொடர்ந்து குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் இவரும் களமிறங்க வாய்ப்பு இருக்கின்றது எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement