• May 02 2024

பெல்ட்டை அறுத்த அமுதவாணன்... உடனே கத்த ஆரம்பித்த அசீம்... பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மூண்ட சண்டை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இந்நிகழ்வானது தற்போது 4வாரங்களை வெற்றிகரமாக கடந்து 5ஆவது வாரத்தில் காலடி எடுத்து வைத்து இருக்கின்றது.

இதில் போட்டியாளர்களுக்குக்கிடையில் எப்போ பார்த்தாலும் சண்டையும், சச்சரவுகளும், வாய்க்கலப்புக்களுமே இடம்பெறுவது வழமையாகி விட்டது. போட்டியாளர்கள் தான் எப்போதுமே சண்டை போடுகிறார்கள் என்று பார்த்தால் பிக்பாஸும் டாஸ்க் என்ற பெயரில் சண்டையை தூண்டி விட்ட வண்ணமே இருக்கின்றார்.


இந்நிலையில் நேற்றைய தினமும் பிக்பாஸ் டாஸ்க் என்ற பேரில் போட்டியாளர்களை ஒருவருக்கொருவர் கோர்த்துவிடும் முயற்சியில் இரங்கி இருக்கின்றார். அதாவது பிக்பாஸ் வீடானது 2ஸ்வீட்ஸ் தொழிற்சாலையாக மாற வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமுதவாணன் தலைமையிலான கடையின் பெயர் "கண்ணா லட்டுத் தின்ன ஆசையா". அதேபோன்று அசீம் தலைமையிலான கடையின் பெயர் "தேனடை" எனவும் பெயர் வைக்கின்றனர். 

இந்த தொழிற்சாலை ஆனது 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அதில் பலகாரங்களை செய்து ஆர்டரை அனுப்ப வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது பொருட்கள், மற்றும் கல்லாப்பெட்டியை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக இருக்கும் எனவும், செம சண்டை வரும் எனவும் ஒருவருக்கொருவர் நேற்றைய தினம் பேசிக் கொண்டமையை தொடர்ந்து இன்றைய தினம் மீண்டும் அவர்களுக்குள் சண்டை மூண்டிருக்கின்றது.

அதாவது இயந்திரத்திற்குள் இருந்து சாப்பாட்டு வகைகளின் பெயர் குறித்த அட்டை வெளியில் வருகின்றது. அதனை ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும் முட்டி மோதி எடுத்துக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் இயந்திரத்தினுடைய பெல்ட் ஒன்று அறுந்து விட்டது. 


அதனைப் பார்த்த அசீம் உடனே "அமுதவாணன் பெல்ட்டை அறுத்து விட்டார்" எனக் கத்துகின்றார். பதிலுக்கு அமுதவாணன் தான் அறுக்கவில்லை எனவும், இது பெல்ட்டா பாரு எனவும் கூறி வாதிடுகின்றார். அதுமட்டுமல்லாது "எப்போ சான்ஸ் கிடைக்கும் என்று பாத்திட்டு இருக்கியா அசீம்" எனவும் கூறுகின்றார்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் வாதிட்டு விட்டு திரும்பவும் இருவரும் அமைதியாக செல்கின்றனர். இவ்வாறாக இன்றைய தினமும் போட்டியாளர்களுக்கு இடையில் மீண்டும் வாய்க்கலப்புக்கள் இடம்பெற ஆரம்பித்து விட்டன.

Advertisement

Advertisement

Advertisement