• Apr 30 2024

இது திட்டமிட்ட கொலை... படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை ஷோபனா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தேசிய விருது பெற்ற பிரபல நடிகைகளில் ஒருவராகவும், புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் ஷோபனா. 


இவர் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் சுஹாசினி மணிரத்னத்துடன் இணைந்து தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தவகையில் சிவா (1989) படத்தில் ரஜினிகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை ஷோபனா கூறுகையில் "சிவா படத்தில் ஒரு மழைக் காட்சியைப் படமாக்கினார்கள். அதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை, ஆனால் உடையைப் பார்த்து நான் அதைப் பற்றி அறிந்து கொண்டேன். ஒரு வெள்ளை வெளிப்படையான புடவை இது மழை பாடல் என்று எனக்குப் புரிந்தது. 


காஸ்ட்யூம் பையனிடம் நான் சொன்னேன். உள்ளே உடுத்த எதுவும் இல்லை. நான் வீட்டுக்கு வந்து ரெடியாகி வரலாமா என்று கேட்டபோது. பத்து நிமிடத்தில் ஷாட் ரெடியாகும் ஆகும் என்று பதிலுக்கு அவர் கூறினார். இது (மழை பாடலும், அதற்கு தரப்பட்ட உடையும்) திட்டமிட்ட கொலை என்று நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர் குறித்து மட்டும் தெரியாது. ரஜினிகாந்த் எப்போதும் ஒரு ஜென்டில்மேன். ரஜினி எனது பிரச்சனைகளை புரிந்து கொண்டார்" எனவும் சிரித்தபடி மழைப்பாடல் அனுபவம் குறித்து தொடர்ந்து பேசினார்.


மேலும் "இது ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் என்னால் படப்பிடிப்பு தாமதம் ஆவதற்கு விரும்பவில்லை. எனவே, ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த ஒரு பிளாஸ்டிக் டேபிள் கவரை எடுத்து பாவாடைக்குள் சுற்றிக் கொண்டேன். ஷூட்டிங்கிற்கு தயாராக படப்பிடிப்பின் போது ரஜினி சார் என்னை தூக்கி நடனமாட, அப்போது பிளாஸ்டிக் டேபிள் கவர் சத்தம் வர ஆரம்பித்தது. ரஜினியின் முகபாவனை மாறியது அவரது முகபாவனை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அவர் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை" எனவும் சிரித்தபடி கூறினார். 


அத்தோடு அப்பேட்டியில் ஷோபனா இதுவரை தனது கடினமான படம் மணிரத்னத்தின் தளபதி என்று கூறினார். அந்த அனுபவம் குறித்து மேலும் அவர் கூறுகையில் "படப்பிடிப்பு நேரம் கடினமாக இருந்தது. அதிகாலையில்... எப்பொழுதும், ரஜினி சாருக்கும் மணி சார்க்கும் இடையில் ஒரு முட்டல் இருக்கும். 3 மணிக்கு 300 பேர் வரலாம் என்றால் ஏன் ஒருவரால் முடியாது?' என மணிரத்னம் கேள்வி எழுப்புவார் சரியான நேரத்தில் வந்த 300 பேரில் நானும் இருந்தேன். படம் பெரிய அளவில் எடுக்கப்பட்டது மற்றும் அந்த நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாக கடினமாக இருந்தது" எனவும் குறிப்பிட்டார் ஷோபனா.

Advertisement

Advertisement

Advertisement