• May 09 2024

சரண்யா பொன்வண்ணனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பிரபல இயக்குநர் - முதல் கணவர் யார் தெரியுமா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா பொன்வண்ணன். ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். 

இவர் நடிகர் மற்றும் இயக்குநர் பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் 1988 இல் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திலேயே பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜா முன்னிலையில் தான் சரண்யா மற்றும் பொன்வண்ணன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சரண்யா பொன்வண்ணனின் முதல் கணவர் ராஜசேகர் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சின்னத்திரை தொடர்களில் நடித்து பெரும் புகழும் பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மிர்ச்சி செந்தில் அப்பாவாக நடித்து பாராட்டை பெற்றிருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜசேகர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். சரண்யா பொன்வண்ணனுக்கு இப்படி ஒரு முதல் கணவர் இருப்பது பலரும் அறியாத விஷயம்.

ஆனாலும் அடுத்ததாக ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சினிமாவிலும் பல உயரங்கள் அடைந்து உச்சத்தில் இருக்கிறார். 

Advertisement

Advertisement

Advertisement