• Apr 27 2024

உருவ கேலிக்கு ஆளாகியிருந்த நடிகை சாய் பல்லவி- மனதை உருக்கும் சம்பவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு பெண்ணாக இருந்து நடிப்பினையும் தாண்டி நடனப் புயலாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் 2008ஆம் ஆண்டு விஜய் டீவியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அதன் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகியிருந்தார். எனினும் நடிகை சாய் பல்லவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் ஊடாகவே தான்.

இவர் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு நடிகையாக இருந்தாலும் அறிமுகமானது மலையாள இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த 'பிரேமம்' என்ற திரைப்படத்தின் ஊடாகவே தான். அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மானுடன் இணைந்து 'களி' என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்.

இவ்வாறாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி பல விமர்சனங்களை கடந்துதான் இந்த நடிப்புத் துறைக்குள் வந்திருக்கின்றார். அதாவது நாகரீகம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. இப்பொழுது பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் ஷார்ட்ஸ் என்ற செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த செயலிகளில் பலரும் தங்களது இயல்பான முகத்தை காட்டுவதில்லை. அதாவது கருப்பான முகத்தை கலராக காண்பிப்பது போன்ற விடயங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் யாராவது தங்களை பற்றி உருவக் கேலி செய்து விடுவார்களோ என்ற பயத்தினால் கருப்பான முகத்தை அழகாக காண்பித்து வருகின்றார்கள்.

இதே போன்று தன்னுடைய திறமையினால் உருவ கேலியை எதிர்த்துப் போராடி வந்த ஒருவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் 'பிரேமம்' என்ற படத்தில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால் பல விருதுகளை வாங்கியுள்ளார். ஆனால் இவர் இப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் பல உருவக் கேலிகளை சந்தித்திருக்கிறார். அதாவது இவருடைய முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கின்றது என்றும், மூக்கு சரியில்லை, உதடு சரியில்லை போன்று பல விமர்சனங்களை செய்து வந்தனர். மேலும் இவர் ஒரு ஹீரோயினாக நடிக்க தகுதியில்லாதவர் இவருக்கு அந்த உருவமே கிடையாது என்று எல்லாம் அவதூறு பேசி இருக்கிறார்கள். ஆனால் சாய்பல்லவியோ இது எதனையுமே பொருட்படுத்தாது தன்னுடைய உழைப்பினாலும், திறமையாலும் தன்னை உருவ கேலி செய்தவர்களை எல்லாம் வாயடைக்கச் செய்து நடிப்பில் பிரபலமாக இருக்கின்றார்.

தற்போது இவருடைய நடிப்பிற்கு என்றே ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இவருக்கு உண்டு. அதுமட்டுமல்லாது இவருடைய முகத்தில் இருக்கும் அந்த அந்தப் பருக்கள் கூட அழகாகவே இருக்கின்றன என்றெல்லாம் கூறிவருகிறார்கள். அதுமட்டுமல்லாது அற்புதமான திறமை, அருமையான நடிப்பு எனப் பல பிரபலங்களும் புகழுமளவிற்கு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், தனுஷ் போன்ற நடிகர்களும் சாய் பல்லவி போன்று இவ்வாறான ஒரு உருவ கேலி போன்ற விஷயங்களை எல்லாம் தாண்டி வந்தவர்கள் தான். இவர்கள் எல்லாருமே உருவ கேலி செய்தவர்களுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement