• Apr 27 2024

நடுரோட்டில் பயில்வானை திட்டிய நடிகை ரேகா நாயர்: புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அண்மையில் இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதனுடன் நடிகை ரேகா நாயர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயில்வான் ரங்கநாதன் திரையுலகை சார்ந்த நடிகர், நடிகைகள் குறித்து யூடிப் சேனல்களில் தரக்குறைவாக பேசுவதாக ஏற்கனவே சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவின் நிழல் பட விமர்சனத்தில் ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்தது குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார் பயில்வான்.

மேலும் இது தொடர்பாக அண்மையில் திருவான்மியூர் பீச்சில் பயில்வான் நடைபயிற்சியில் ஈடுப்பட்ட போது அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரேகா நாயர். அத்தோடு ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் எழுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவர்களை விலக்கி விட்டனர். இந்த சம்பவம் திரைத்துறையில் கடும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் சமயத்தில் தமிழுக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன், நான் நேரடியா இதைப்பற்றி கூறினேன். போலீஸ் புகாரும் கொடுத்தேன். ஆனா வேற யாருக்கும் தைரியம் இல்லை. இரண்டு பெண் வீராங்கனைகள். ராதிகா, ரேகா நாயரும் நடுத்தெருவில் நிறுத்தி காலில் கிடப்பதை கழட்டி அடிப்பேன்னு பேசுனாங்க. ரேகா நாயரை நான் பாராட்டுறேன். பல பேருக்கு இந்த தைரியம் இல்லை.

அத்தோடு இவரை எதிர்த்த மறுபடியும் ஏதாவது கதை கட்டி விடுவாருன்னு பயப்படுறாங்க. நான் பயில்வான் கிட்ட தனிப்பட்ட முறையில பேசுனேன். நம்ம வீட்லயும் பொண்ணு இருக்குன்னு. ஆனா மீனா கணவர் இறந்தது பற்றியும் மனிதாபிமானம் இல்லாம, மிருகத்தனமா பேசுனான். அதான் எனக்கு வருத்தம். முதல்ல நம்ம குடும்பத்தை பார்க்கணும் என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் கே. ராஜன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement