• May 05 2024

பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி ஏமாற்றிய நடிகை ரம்பா... போலீஸ் வரை சென்ற கேஸ்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 90 காலப்பகுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து ரசிகர்கள் பலரின் மனதை கொள்ளை கொண்டவரே நடிகை ரம்பா. இவ்வாறாக நடிப்பில் பட்டையை கிளப்பி வந்த இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து தற்போது 2மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் சந்தோசமாக வசித்து வருகின்றார்.


இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் இடம்பெற்ற போட்டு ஒன்றில் நடிகை ரம்பா தன்னை ஏமாற்றியதாக கூறி பரப்பரப்பைக் கிளப்பி இருக்கின்றார். அதாவது "3 Roses படத்தின் போது ரம்பா தன் சகோதரனை வைத்து தயாரித்திருந்தார். அதற்காக ரம்பா என்னிடம் 4 கோடிக்கும் மேல் பணம் வாங்கியிருக்கின்றார். ஆனால் அதனை திருப்பித் தரவில்லை, இதனால் போலிஸ் வந்து விசாரித்தார்கள். அதன்பின் 3. 5 கோடி தருகிறேன்னு ரம்பா சகோதரன் சொன்னார். ஆனால் அதன் பின்னரும் அதை தராமல் ஏமாற்றினார்கள்" எனக் கூறியுள்ளார்.


மேலும் "இந்தப் பிரச்சினையின் போது உடனே ரம்பா, மீடியாவை கூப்பிட்டதால், PRO நெல்லை சுந்தரம் ஒட்டுமொத்த மீடியாவை கூப்பிட்டதால் நடிகை பக்கம் அனைவரும் சென்றனர். நான் தான் தப்பு பண்ண மாதிரி எல்லாரும் பேசினார்கள். இது அப்போ பரபரப்பாக நடந்தது. நான் பப்ளிசிட்டிக்காக இப்போ இப்படி சொல்லல. நான் யாரையும் கூப்பிட்டு பேசுறது கிடையாது. எனக்கு தான் அவ பணம் தரணும், ரம்பாவுக்கு எழுதி வைத்து தான் காசு கொடுத்தேன், அவ மேல் கேசு போட்டேன், அது அப்படியே போச்சசு" எனவும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement