தமிழ் சினிமாவில் குறும்படங்கள் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் இதனைத் தொடர்ந்து காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்படத்தினைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இது தவிர அண்மையில் இவரது நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படமும் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இந்நிலையில் சமீப காலமாக அவர் பதிவிடும் புகைப்படங்களை ரசிகர்களின் விமர்சனங்களுக்கு வருவதை பார்த்து வருகிறோம், பலரும் அவர் முகத்தின் வடிவதை மாற்றிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாகவும் சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் அதுல்யாவின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா எனக் கேட்டு வருவதையும் காணலாம்.
Listen News!