அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபல்யமான நடிகர் தான் விஜய்தேவர் கொண்டா. இப்படங்களைத் தவிர பல தெலுங்குப் படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் நோட்டா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் நேற்றைய தினம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் லைகர். பூரி ஜெகந் நாத் இயக்கத்தில், சுமார் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
அத்தோடு சினிமா விமர்சகர்களும் இப்படத்திற்கு இதையே கூறி வருகின்றனர். ஆனால், விஜய்தேவரகொண்டா கடுமையாக உழைத்துப் படத்தில் நடித்திருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.
நேற்றுதான் இப்படம் ரிலீஸான நிலையில் கர் நாடகாவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் 17% பார்வையாளர்கள்தான் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதேபோல், மற்ற இடங்களில் இப்படத்திற்கு பார்வையாளர் அதிகளவில் வரவில்லை என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா இப்படம் சரியாகப் போகவில்லை என்பதல், சோகத்தில் இருந்ததாகவும், அவர் இரவு முழுவதும் மது அருந்திக்கொண்டு, அறையைப் பூட்டியதாகவும், அவரது நெருக்கமான பாலிவுட் இயக்குனர், கரண் ஜோகரின் எண்ணையும் பிளாக் செய்ததாகவும் தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், லைகர் படம் ரிலீஸான முதன் நாளில் உலகளவில் ரூ.33.12 கோடி ரூபாய் வசூலீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!