• May 12 2024

திடீரென உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.

இருப்பினும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

நடிகர் சூர்யா நாமக்கல் மாவட்ட ரசிகர் மன்ற செயலாளராக கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்தவர் ஜெகதீஷ். இவர் நேற்று திடீரென உயிரிழந்ததை அடுத்து அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த சூர்யா உடனடியாக நாமக்கல் சென்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவரது மனைவி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய சூர்யா, உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement