• May 02 2024

நடிகர் செந்திலுக்கு மீண்டும் திருமணம்.. வாழ்த்து மழையில் நனையும் தம்பதி.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் செந்தில். இவருடைய காமெடி கலந்த பேச்சு, நடிப்பு அனைத்துமே பட்டிதொட்டி எங்கும் பரவி அப்போதைய காலகட்டத்தில் பட்டைய கிளப்பி இருந்தது.


இதனால் பல படங்களிலும் பிசியாகி நடித்து வந்த செந்தில் 1984 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில் சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோயிலுக்கு செந்தில் தனது 70 வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு நேற்று இரவு மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, ஹேமசந்திர‌ பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள்,  குடும்பத்தினர், உறவினர்களுடன் வருகை தந்து கஜபூஜை, கோபூஜை செய்து  முதல்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று சுவாமி அம்பாளை வழிபட்டனர்.


இதனைத் தொடர்ந்து செந்திலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை வெகுவிமரிசையாக காட்டப்பட்டது. 


பின்பு செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்தார். இதனையடுத்து செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு மாறி மாறி இனிப்பு வழங்கி கொண்டனர். 


மீண்டும் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தது போல் அமைந்த இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அத்தோடு இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனக் கூறி ரசிகர்கள் இத்தம்பதியினருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement