• May 04 2024

பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க குதிரையில் மாஸாக வந்து இறங்கிய நடிகர் கூல் சுரேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தான் கூல் சுரேஷ். இவர் சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை முதல் ஷோவிலையே சென்று பார்த்து விட்டு விமர்சனங்களைக் கூறி வருவார்.

இவ்வாறு தான் நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை புரமோட் செய்ததில் இவருக்கும் பங்கு உண்டு.இதனால் அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர்  ஐசரி கணேஷ் அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார்


இந்நிலையில், இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசாகி இருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை காண இன்று அதிகாலை தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷின் எண்ட்ரியை பார்த்து பலரும் வியந்து போயினர். ஏனெனில் அவர் மாஸாக குதிரையில் எண்ட்ரி கொடுத்தார்.


 அதுமட்டுமின்றி கையில் ‘வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்த போடு’ என்கிற வாசகம் அடங்கிய பேனரையும் கொண்டு வந்தார்.அவர் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும், அதனை கடன் வாங்கி வாடகைக்கு எடுத்து வந்திருப்பதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்தார். 

அவர் குதிரையில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பொன்னியின் செல்வன் படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement