• May 11 2024

“அது என் 18 வருஷ கனவு…” மனம் திறந்து பல விசயங்களை பேசிய நடிகர் ஜெய்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜயின் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்திருந்த பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார் நடிகர் ஜெய்.

அதனைத் தொடர்ந்து இவர் சென்னை-28, சுப்ரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பு மட்டும் இல்லாமல் இசை, கார் ரேஸ் என்ற மற்ற துறைகளிலும் அவர் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றார்.இடையில் இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை.

மேலும் இவர் சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் இருந்து வந்தார். ஆனால், நடிகராக இருந்த ஜெய் சமீபத்தில் இசையமைப்பாளராக மாறிய இயக்குநர் சுசீந்திரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார்.

1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதையாக தற்போது உருவாகி வரும் ‘பட்டாம்பூச்சி’ படத்தில் ஜெய் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சுந்தர்.சி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, முதன்முறையாக சைக்கோ வில்லனாக ஜெய் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் முன்னோட்டங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்நிலையில் படத்தின் ரிலீஸை ஒட்டி ஜெய் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த நேர்காணலில் நடிப்பு, கார் ரேஸ் மற்றும் இசை என தான் ஆர்வமாக ஈடுபட்டு வரும் துறைகள் பற்றி பேசியுள்ள ஜெய்,

அதில் “இசையமைப்பாளராக ஆகவேண்டும் என்பது எனது 18 வருட கனவு. பகவதி படத்துக்கு முன்பே நான் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் 5 ஆவது கிரேட் வரை படித்துள்ளேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பில் ஆர்வமும் வாய்ப்புகளும் வந்ததால் இசையமைக்க முடியவில்லை. மேலும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்வதால் நடிப்பு பாதிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் நடிப்பால்தான் சரியாக கார் ரேஸ் பந்தயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement