• May 11 2024

ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யாவிற்கு மயூ சொன்ன விசயம்– பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கின்றது.

மேலும் பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது.

இவ்வாறு இருக்கும் கதைக்களத்தில் பரபரப்பு திருப்பங்களுடன் நகருகின்ற இந்த சீரியலில் இன்று என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

ராஜேஷ் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ராதிகா அவருடைய அண்ணன் மற்றும் அம்மா மூவரும் ஸ்டேஷனுக்குச் சென்று கோபியை கூப்பிட்டு விசாரித்து பாருங்கள் எனக் கூறுகின்றனர்.இவ்வாறுஇருக்கையில் கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கோபி நானும் ராதிகாவும் கல்யாணம் பண்ணிக்க போகிறோம் எனக்கு அடுத்த மாதம் விவாகரத்து கிடைத்து விடும் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். மயூவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் இவர் பொய் சொல்கிறார்.

இதன் பிறகு கோபி மயூவுக்கு போன் போடுகிறார்.போனில் பேசிய மயூ கோபி இடம் மிகவும் அக்கறையாக அம்மாவை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க நீங்க ரெண்டு பேரும் பேசுங்க.

உங்க கிட்ட பேசாம எனக்கு கஷ்டமா இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என பேச இதைக்கேட்ட பொலீஸ் ராஜேஷ் மீதுதான் தவறு இருப்பதை புரிந்து கொள்கின்றனர்.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என கடிதம் எழுதி கொடுத்து விட்டு கிளம்புங்க என போலீஸ் கூறுகிறார். இதனால் ராதிகா ஷாக்கடைகின்றார்.

இந்தப் பக்கம் பாக்கியா ராதிகா வீட்டுக்குச் சென்று இருக்க அப்பா கம்ப்ளைண்ட் கொடுத்ததால் அம்மா பாட்டி மாமா என மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விடுகிறார்கள் என சொல்லி அழ இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement