• May 03 2024

மீண்டும் அபி வீட்டிற்குள் நுழைந்த வெற்றி... சிலம்பம் என்ற பேரில் மனைவியிடம் செய்யும் சில்மிஷம்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தென்றல் வந்து என்னை தொடும்' என்ற சீரியலானது சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. இதில் வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தைதான் சுடர் என்கிற உண்மையை இத்தனை நாட்களாக வெற்றியிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தனர். வெற்றி மிகவும் சிரமப்பட்டு சுடர் தன்னுடைய குழந்தை தான் என்பதைக் கண்டுபிடித்து இருக்கிறார்

இந்த நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அபி வீட்டில் வேலை செய்யும் ஒருவரிடம் சிலம்பம் மாஸ்டரை அழைத்து வருமாறு கூறுகிறார். அதாவது சுடருக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்க சிலம்பம் கற்றுத் தர வேண்டும் என்று அபி முடிவெடுத்திருக்கிறார்.


அந்த சமயத்தில் சிலம்பம் மாஸ்டராக மீண்டும் அபிபின் வீட்டிற்குள் நுழைகிறார் வெற்றி. அங்கு சுடருக்கு சிலம்பம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, சுடர் அபியையும் அழைத்து நீயும்  வந்து கற்றுக் கொள் என்று கூறுகிறார். பின்னர் அபிக்கும் வெற்றி சிலம்பம் கற்றுக் கொடுக்கிறார். 

அப்போது அபியின் கைகளைப் பிடித்து சிலம்பம் சொல்லிக் கொடுக்கிறார் வெற்றி. இந்தப் ப்ரோமோவை வைத்துப் பார்க்கும் போது மீண்டும் அபியும் வெற்றியும் விரைவில் இணைவார்கள் என்பது தெளிவாகின்றது.


Advertisement

Advertisement

Advertisement