தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் தான் விஜய். இவர் தற்பொழுது பிஸியாக நடித்து வரும் நடிகராகவும் வலம் வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழது வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படத்தினை தெலுங்கு இயக்குநர் வம்ஷி படைப்பள்ளி இயக்கி வருகின்றார்.
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரிப்பதோடு ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.இவர்களுடன் சரத்குமார், பிரபு, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலையொட்டியை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தீபாவளி அன்று இப்படத்தின் முதல் பாடலை வெளியிடப்படவிருக்கிறது. தற்போது அந்த பாடலை உருவாக்கும் பணிகளில் தமன் ஈடுபட்டுள்ளார். குத்து பாடலாக மரண மாஸாக இந்த பாடல் எப்படி உருவாகிறது என்ற புகைப்படம் ஒன்றையும் தமன் வெளியிட்டுள்ளார. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது எனலாம்.
Listen News!