• May 01 2024

என்னை நிறைய பேர் லவ் பண்றாங்க:உண்மையை உளறிய ரவீந்தர்-இது மகாலக்ஷ்மிக்கு தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரேகரனும், டிவி நடிகையான மகாலக்ஷ்மியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் செப்டம்பர் முதலாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.


இவர்களின் திருமத்திற்கு பலரும் வாழ்த்து கூறிவந்தாலும் கடும் விமர்சனமும் எழுந்து வருகின்றது.அந்தவகையில் திருமணம் முடிந்த கையோடு பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அப்படி ஒரு பேட்டியில் ரவீந்தர் தெரிவித்ததாவது...

மகாலக்ஷ்மிக்கும் தெரியும், என்னை நிறைய பேர் காதலிக்கிறார்கள். இதை வேறு வழியில்லாமல் தான் கூறுகின்றேன்.இந்த உடம்பை வச்சுக்கிட்டு, இதை தூக்கிக்கிட்டு என்னால் எல்லா வேலையும் செய்ய முடியுமா என்று கூறியுள்ளார்.


ரவீந்தர் குண்டாக இருந்து கொண்டு அழகாக, ஸ்லிம்மாக இருக்கும் மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டதால் தான் அவர்கள்  எங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரவீந்தரின் பணத்திற்கு ஆசைப்பட்டு, அவர் குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று விமர்சிக்கிறார்கள். மேலும் இது பணத்திற்காக அல்ல மாறாக காதலுக்காக நடந்த திருமணம் என்று ரவீந்தர் விளக்கம் அளித்தும் அந்த பேச்சு அடங்குவதாக இல்லை.


எனினும் இதற்கிடையே மகாலக்ஷ்மிக்கு பல லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ. 75 லட்சம் மதிப்புள்ள பங்களா, தங்கக் கட்டில் ஆகியவற்றை ரவீந்தர் பரிசாக அளித்துள்ளார் என்று தகவல் வெளியானது. இதை அறிந்தவர்களோ, இது கண்டிப்பாக பணத்திற்காக நடந்த திருமணம் தான் என்று பேசுகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement