தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சார்மி. இவர் தமிழில் 'காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு' உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், குழந்தைத்தனமான நடிப்பினாலும் ரசிகர்கள் பலரது மனங்களை கொள்ளை கொண்டிருந்தார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள சார்மி, தற்போது பிரபல தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் இவர்கள் தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 'லைகர்' என்ற படம் வெளியாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் படுதோல்வி அடைந்தது.
இதனால் அதிர்ச்சியான சார்மி சமூக வலைத்தளத்தில் இருந்தே உடனடியாக திடீரென்று விலகினார். இந்த படத்தை பூரி ஜெகன்னாத் டைரக்டு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைகர் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்டு நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் சார்மியிடமும், பூரி ஜெகன்னாத்திடமும் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பட விநியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் தன்னை மிரட்டுவதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸில் பூரி ஜெகன்னாத் புகார் அளித்துள்ளார்.
அதில் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், வீட்டிலும் பாதுகாப்பு போடும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார் பூரி ஜெகன்னாத். இதில் சார்மிக்கும் இவ்வாறான மிரட்டல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!