• May 02 2024

3வது மனைவி என்னை கொலை செய்யப் பார்க்கிறார்- 4வது காதலிக்கு உதட்டு முத்தம் கொடுத்த நடிகர் அளித்த புகார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ்.இவர் தமிழில் கௌரவம்,அயோக்கியா, வீட்டுல விஷேசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இது தவிர சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. நரேஷ் பாபு ஏற்கனவே மூன்று திருமணம் செய்தவர். சமீபத்தில் மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் ஒன்றாக தங்கியிருந்தனர். இதனை அறிந்த நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவியான ரம்யா ஹோட்டலுக்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.


ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நரேஷ் பாபு விசில் அடித்தும் நடனமாடியும் தனது மூன்றாவது மனைவியை கிண்டல் செய்தப்படியே ஹோட்டல் அறையில் இருந்து பவித்ரா லோகேஷுடன் வெளியேறினார். இந்நிலையில் பவித்ராவும் நரேஷ் பாபுவும் ஒன்றாக புத்தாண்டு கொண்டாடினர். அப்போது பவித்ராவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விரைவில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டார் நரேஷ் பாபு.

இதனால் கடுப்பான நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி, விவாகரத்து கொடுக்க மறுத்து வருகிறார். இதனால் நரேஷ் பாபுவும் நடிகை பவித்ராவும் திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மூன்றாவது மனைவியான ரம்யா தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் நரேஷ் பாபு. அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் நரேஷ் பாபு இந்த பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


தன்னுடைய மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ரம்யாவை தான் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்தே அவர் தன்னை நிம்மதியாக வாழ விடாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் இருந்து 10 கோடி ரூபாய் கேட்டு ரம்யா மிரட்டுவதாகவும் நரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ரம்யாவிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத் தருமாறு தெலுங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளதாகவும் நரேஷ் பாபு தெரிவித்துள்ளார். நடிகர் நரேஷ் பாபு தனது மூன்றாவது மனைவி இப்படி பகீர் புகார்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement