• May 17 2024

மனைவியாக வந்தால் மாதம் 25 லட்சம் சம்பளம் : விஷால் பட நடிகை கூறிய பரபரப்பு தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளையில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கவனத்தை ஈர்த்திருந்தார் நீத்து சந்திரா.

இவர் அப்படத்தில் பணக்கார வீட்டு பெண்ணாக வரும் தேஜாஸ்வினியாக நீத்து சந்திரா நடித்திருந்தார். பாலிவுட் நடிகையான இவரது கவர்ச்சி அந்த படத்தில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருந்தது.

மேலும் முன்னதாக யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை உள்ளிட்ட படங்களை தோன்றியவர் சிங்கம் 3 படத்தில் ஓசோனே சோனே என்னும் பாடலுக்கு நடனமாடியிருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டுள்ள நீத்து சந்திராவின் சமீபத்திய பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மனம் உடைந்து அவர் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த பேட்டியில் பேசிய நீத்து சந்திரா நான் 13-க்கும் அதிகமான தேசிய நடிகர்களுடன் நடித்துள்ளேன் இன்று எனக்கு எந்த வேலையும் கிடையாது.மேலும் ஒரு தொழிலதிபர் என்னிடம் மாத சம்பளத்திற்கு மனைவியாக வரச் சொன்னார். அத்தோடு அதும் 25 லட்சம் சம்பளமாக கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன் ஒரு இயக்குனர் நான் நேரத்திற்கு படபிடிப்பிற்கு வரவில்லை எனக் கூறி என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். என மிகுந்த வருத்தத்துடன் பேசி உள்ளார்.

2005 ஆம் ஆண்டு கரம் மசாலா மூலம் ஹிந்தி சினிமாவுக்கு என்றியான இவர் முன்னதாக விமான பணிப்பெண் அதில் விமான பணி பெண்ணாக நடித்திருந்தார் .கோதாவரி என்கிற தெலுங்கு படம் மூலம் 2006இல் டோலிவுட் அறிமுகமாகி இருந்தார்.

அத்தோடு இவர் ட்ராபிக் சிக்னல், அப்பார்ட்மெண்ட், நோ ப்ராப்ளம் அதோட கிரேக்க திரைப்படம் ஹோம் ஸ்வீட் ஹோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகையின் தற்போதைய எண் நிலை குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement