தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா.
அத்தோடு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் என்று கூற வேண்டும்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2005ஆம் ஆண்டு சுஜயா சந்திரனை முதன் முதலில் திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடமாக அவருடன் சேர்ந்து வாழ்ந்த இவர்களின் இந்த திருமண வாழ்க்கை 2008ல் முடிவுக்கு வந்து விவாகரத்தும் பெற்றார்கள்.
இதன்பின், 2011ஆம் ஆண்டு ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அத்தோடு சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த இருவரும் 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்ட யுவன் இந்த வாழ்க்கையையும் முடித்துக்கொண்டார்.
இவ்வாறுஇருக்கையில் 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்ட யுவன் அடுத்த ஆண்டு 2015ல் ஷாஃப்ரூன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜியா எனும் ஒரு அழகிய பெண் குழந்தையும் இருக்கிறார்.
Listen News!