• Apr 27 2024

என் புன்னகைக்கு எப்போதும் நீ குறை விட்டதே இல்லை- நீண்ட நாளுக்குப் பிறகு கணவருடன் சேர்ந்து எடுத்த போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி

stella / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்த நடிகை மகாலட்சுமி. வாணி ராணி, ஆபிஸ், செல்லமே, உதிரிப்பூக்கள் மற்றும் ஒரு கை ஓசை என முக்கியமான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவருக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டு இருவரும் மறுமணம் செய்துகொண்டார்கள்.


இவர்கள் இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். புது கார் வாங்குவது, ஓட்டலுக்கு செல்வது என, ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வருவதை புகைப்படமாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்து வருகின்றனர்.


இருப்பினும் ரவீந்தர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் தான் ரிலீஸானார். இதனை அடுத்து மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் என் புன்னகைக்கு நீ தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement