• Sep 20 2024

’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் அறிவிப்பை அவசர அவசரமாக வெளியிட்டது ஏன்? ஆர்ஜே பாலாஜிக்கு செக்கா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தையும் கொடுத்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த படத்தில் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும், த்ரிஷா தான் அம்மன் வேடத்தில் நடிக்க போகிறார் என்றும் செய்திகள் வெளியானது.

ஆனால் அதே நேரத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்ற நிலையில் படத்தின் டைட்டிலை அவர்கள் தர மறுத்ததாகவும் இதனை அடுத்து ஆர்ஜே பாலாஜி ’மாசாணி அம்மன்’ என்ற டைட்டிலை தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது.



’மாசாணி அம்மன்’ என்ற டைட்டில் வைத்தாலும் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் கதையின் தொடர்ச்சி தான் இந்த படம் என்று கூறப்பட்ட நிலையில் தான் வேல்ஸ் நிறுவனம் திடீரென சுதாரித்து ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா நடிப்பது மட்டுமின்றி இந்த படத்தை தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து வேல்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜிக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காக தான் ’மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு அவசர அவசரமாக வெளியானதாகவும் நயன்தாராவையும் தயாரிப்பாளராக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஒரு பக்கம் நயன்தாரா நடிக்க ’மூக்குத்தி அம்மன் 2’, இன்னொரு பக்கம் த்ரிஷா நடிக்கும் ’மாசாணி அம்மன்’ என ஒரே நேரத்தில் இரண்டு அம்மன் படங்கள் உருவாக இருப்பது தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement