• Sep 22 2023

குணசேகரனைப் பார்க்கப் போன நந்தினி செய்த காரியம்- சாதாரணமாகச் சொன்ன கரிகாலன்- ஒன்றும் புரியாமல் நின்ற ஈஸ்வரி மற்றும் ஜனனி

stella / 1 month ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்தவாறு இருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் வீட்டிலிருக்கும் மருமக்கள் எல்லோரும் குணசேகரனைப் பார்க்கச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் குணசேகரனைப் பார்க்கும் போது நந்தினி, என்னடா ஆச்சு என்று கேட்க, கரிகாலன் ஒரு பக்கம் இழுத்திருச்சு என்று சொல்ல நந்தினி என்னடா இப்பிடி சாதாரணமாக சொல்லுற என்று கேட்க அதற்கு கரிகாலன் உசிரு போகல தானே என்று கூறுகின்றார்.


பின்னர் குணசேகரனை நந்தினி பார்க்க, குணசேகரன் ஏன்மா நந்தினி எதுக்கு எட்டி எட்டிப் பார்க்கிற என்று கேட்ட போது அதற்கு நந்தின் ஐ பீல் வெறி சாரி மாமா என்று சொல்ல குணசேகரன் இங்கிலீஸ் பேசிற நேரமா இது என்று கேட்கின்றார்.நந்தினி இங்கிலீஸ் பேசியதால் ஜனனியும் ஈஸ்வரியும் வியந்து போய் நிற்பதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement