• May 19 2024

போலீஸ் கையை கடித்த நடிகைக்கு நேர்ந்த கதி-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வெப் சீரீஸ் நடிகை ஒருவர் பெண் காவலரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்ததாவது,

கர்நாடகாவைச் சேர்ந்த 28 வயது வெப் சீரீஸ் நடிகை மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரியில் வசித்து வருகின்றார்.மேலும் இவர் வெப் சீரிஸ்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் புனேவிற்கு சொந்த வேலைக்காக வந்துள்ளார்.

அப்போது ஆன்லைன் மூலமாக தனக்கு ஹோட்டலில் தங்கும் அறையை புக் செய்துள்ளார். எனினும் இந்நிலையில், ஹோட்டலுக்கு வந்து தங்கியதும் அறையில் போதிய வசதியில்லை எனக் கூறி ஹோட்டல் ஊழியர்களிடம் சண்டை போட்டுள்ளார் அந்த நடிகை. அத்தோடு, தான் செலுத்திய பணத்தை திரும்பத் தர வேண்டும் எனவும் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், ஹோட்டல் ஊழியர்கள், இவர் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் ஹோட்டலுக்கு விரைந்துள்ளனர். அந்த நடிகை காவல்துறையினரிடமும் தகராறு செய்துள்ளதாகவும், பர்வீன் ஷேக் என்ற பெண் காவலரை கையில் கடித்து அந்த நடிகை தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட நடிகை மீது காவல்துறை இபிகோ 353, 332, 427, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வதோடு கைதும் செய்துள்ளனர்.மேலும் அப்பகுதியின் துணை ஆய்வாளர் மன்ஜுஷா முலுக் வழக்கை விசாரித்து வருகின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement