• Apr 27 2024

நடித்த ஷெரினா-ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தனம்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் தற்போது ஆறாவது சீசனை எட்டி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் 21-வது போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்தார்.

இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் ஜி.பி.முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் வெளியேறி தற்போது 19போட்டியாளர்களே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 17ஆம் நாள் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்....

தனலட்சுமிக்கும் மகேஸ்வரிக்கும் இடையில் மோதல் தான் ஏற்பட்டது அது என்னவென்றால் மகேஸ்வரி ஷிவின் பொம்மையை வைத்து இருந்தார்.அதே பேல தனலட்சுமி மகேஸ்வரியின் பொம்மையை வைத்து இருந்தார்.இதனால் இருவரின் பொம்மையும் கடைசியில் குப்பைத் தொட்டிக்குள் சென்றுவிட்டது.\இவ்வாறு இருக்கையில் இந்த பொம்மை டாஸ்க்கால் வீட்டுக்குள் இருக்கும் பலபேர் அடித்துக்கொண்டு இருக்கையில் பிக்பாஜ் வீட்டுக்குள் குரூப் ஆரம்பித்துவிட்டது.அதாவது அஸீம் ஆயிஷா மகேஸ்வரி என்றும் மற்றொரு புறம் ரச்சிதா அமுதவானன் விக்ரம் என்று பல பேர் பல குரூப்களை ஆரம்பித்துள்ளனர்.

பொம்மை எடுத்துக்கொண்டு போன டாஸ்கில் ஷெரினா கீழே விழுந்து விடுகிறார்.இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் கீழே விழவில்லை எல்லாமே நடிப்புத் தான் என்று கூறுகிறார்கள்.ஆனால் அஸீம் டீம் தனலட்சுமியை கடுமையாக பேசுகின்றார்.

தனலட்சுயை நீ எல்லாம் பொண்ணா என அஸீம் திட்டுகின்றார்.இதன் பிறகு ஷெரினாவை ரீட்மன்ட்க்காக உள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள்.அதன் பிறகு ஆயிஷா வந்து அவங்க ரீட்மண்ட்க்கு போயிட்டாங்க இருந்தும் யார் தள்ளவிட்டாலும் என்ன நடந்தது எண்டு கேட்டீங்களா என கடுமையாக அவரும் திட்டிவிடுகிறார்.

தனலட்சுமி விக்ரமனிடம் புலம்பிக்கொண்டு இருக்கின்றார்.அதாவது ஷெரினை நான் தள்ளிவிடல அப்பிடி ஒரு வீடியோ கமல் சேர் காட்டினால் நான் எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்கின்றேன்.ஆனால் அப்பிடி இல்லாவிடில் என்னை திட்டினவங்க எல்லோரும் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் அஸீம் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும் எனக் கூறுகின்றார்.

அதன் பிறகு ஷெரினா ரீட்மண்ட்க்கு பிறகு வெளியில வந்தாங்க.அவ்வாறு அவர் வெளியில் வந்ததும் தனலட்சுமி அவரிடம் எப்பிடி இருக்கு எனக் கேட்க அவர் எதுவும் பேசாமல் இருந்தார்.அதன்பிறகு தனலட்சுமி தனியாக போய் அழுதிட்டே இருந்தார் .தப்பு செய்யாமல் எல்லோரும் திட்டிறாங்க.என் பக்கம் யாரும் நிற்கவில்லை.பிக்பாஸ் நீங்களும் சொல்லவில்லை.என அழுதுகொண்டே பேசுகின்றார்.

இவ்வாறு இருக்கையில் ஆயிஷா மற்றும் அசீம் ஷெரினா எல்லோரும் பேசிட்டு இருக்கும் போது ஆயிஷா தான் இந்த விளையாட்டை விளையாடவில்லை என்று கூறியதும் அசீம் புது பிளான் போட்டு கொடுக்கின்றார்அதாவது ஆயிஷாவின் பொம்மையை உடம்பு முடியாத ஷெரினாவிடனும் ஆயிஷாவிடம் ரக்சிதாவின் பொம்மையை கொடுத்து ரச்சிதாவின் பொம்மையை வைக்கவிடாமல் மகேஸ்வரி மற்றும் அஸீம் தடுக்க ஷெரினா ஆயிஷாவின் பொம்மையை அழகாக கொண்டே வைக்கின்றார்.

இவ்வாறுஇருக்கையில் இந்த விசயங்கள் இடம்பெற்றதால் தனலட்சுமிக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.அஸீம் டீமிற்கு வெறுப்பு தான் கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement