• May 18 2024

'நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம்'- பரபரப்பான தகவலைக் கூறிய பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் விஜய் பாபு. இவர் ஹோம் போன்ற இன்னும் பல திரைப்படங்களை ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கின்றார். இவர் மீது கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர் பலாத்கார வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம் பெண் ஒருவரை எர்ணாகுளத்தில் உள்ள தனது குடியிருப்பில் விஜய் பாபு பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து விஜய் பாபு வெளிநாட்டுக்கு தப்பி சென்றதை அறிந்த போலீசார் அவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். இதற்கிடையே நடிகர் விஜய்பாபு, முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, அவரை விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டது. மேலும் 2-ஆம் தேதி வரை அவரை கைது செய்யவும் தடை விதித்தது.

அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த விஜய்பாபு போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவர் நடிகை குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். இது தொடர்பாக விஜய் பாபு, என் மீது புகார் கூறிய நடிகையை எனக்கு முன்பே தெரியும். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரது சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம். எனது படங்களில் நடிக்க நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவில்லை.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் என்மீது புகார் கூறியுள்ளார்.இது வேண்டுமென்றே கூறப்பட்ட புகார். எனது தொழில் எதிரிகளால் புனையப்பட்ட வழக்கு. இது தொடர்பான விசாரணைக்கு நான் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகையுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்ட தகவல்களையும் போலீசிடம் ஒப்படைத்துள்ளார் விஜய் பாபு. இந்த விவகாரம் தற்போது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement