• May 10 2024

'எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது'-அஜித் மேனேஜர் திடீரென வெளியிட்ட அறிக்கை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவரது படங்கள் வெளிவந்தாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் இவர் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தை எச். வினோத் இயக்குவதோடு போனி கபூர் தான் தயாரித்து வருகின்றார். பொதுவாக அஜித் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கூறும் வகையில் வசனங்கள் வைத்திருப்பார்கள். அதே போல அடிக்கடி அவரது மேனேஜர் மூலமாகவும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் அஜித்.

தன்னை யாரும் இனி தல என குறிப்பிட வேண்டாம் என இதற்கு முன்பு அறிக்கை வெளியிட்டார் அஜித். இந்நிலையில் இன்று அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

https://twitter.com/SureshChandraa/status/1531185060094717952

ஒரு கணவன் மனைவி ஜோடி கழுதையை வைத்து எது செய்தாலும் அதை பார்ப்பவர்கள் எதாவது ஒரு கருத்து கூறிக்கொண்டே இருப்பார்கள். நான் எது செய்தாலும் உலகம் பேசிக்கொண்டே தான் இருக்கும், எல்லோரையும் நம்மால் திருப்தி படுத்த முடியாது என்ற கருத்தை அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டு உள்ளனர்."To whom so ever it may concern! Unconditional love - Ajith" என குறிப்பிட்டு இருக்கிறார் சுரேஷ் சந்திரா. அதனால் அஜித் யாருக்காக இப்படி ஒரு கருத்தை கூறினார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement