• Apr 27 2024

மரியாதை இல்லாமல் பேசிய வி.ஜே.பார்வதி... கடுப்பான நடிகர் சதிஷ்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

குடிமகன் திரைப்படத்தின் நிகழ்வு ஒன்றில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டார். இவர் இவ்வாறு கூறி இருந்தார் "வி.ஜே.பார்வதியை பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும், இவர் வயது வித்தியாசம் இன்றி எல்லா பையன்களையும் வாடா,போடா என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார்".


இதை அந்த பசங்க பெருந்தன்மையாக விட்டு கொடுத்து விட்டு செல்கிறார்கள். இதே நாங்கள் ஒரு பொண்ணுகிட்ட போய் வாடி,ஆமாடி என்று பேசினால் என்ன ஆகி இருக்கும்? என்று காமெடியாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் வி.ஜே.பார்வதியிடம் நான் கத்து கிட்ட ஒரு விஷயம் இருக்கு, ஷோ ஆரம்பிக்க முன்னாடி போய் அங்கு இருக்கும் சிலரிடம் என்னடா நான் நல்லா இருக்கேனா?என்று கேக்கிறார்.


அவர்கள் ஒன்றுமே சொல்லாமல் இருந்தாலும் ஆஹ் நான் நல்லா தான் இருக்கேனா என்று கூறி விட்டு செல்கிறார். நாங்கள் ஏற்கனவே ஓ மை கோஸ்ட் திரைப்பட நிகழ்வில் சந்திச்சோம். அதில் சன்னி லியோனும் கலந்து கொண்டார்.


இப்போது சன்னி லியோன் வரமுடியவில்லை அதனால் ஆம்பிள சன்னி லியோன் ஜி.பி.முத்துவை அனுப்பி இருக்கிறார் என்று காமெடியாக கூறினார். இந்த படத்தில் சரக்கு அடிக்கிறவனெல்லாம் ஆரோக்கியமா இருக்கிறான்,சரக்கு அடிக்காதவன் எல்லாம் 40 வயசிலேயே சாகுறான் என்று ஒரு கருத்து இருக்கிறது.


இந்த கருத்தை கேட்டுவிட்டு சரக்கு அடிக்காதீங்க என்று எப்படி கூறுவது? இருந்தாலும் அது கெட்டது தான் தயவு செய்து யாரும் அதை செய்ய வேண்டாம் என்று கூறினார். படிக்கிற பசங்க இருந்தா கேளுங்க இந்த வயசில் தம் அடிப்பது, சரக்கு அடிப்பது மட்டுமல்ல லவ் பண்றதும் தப்பு தான் செய்யாதிங்க என்று கூறினார்.


ஆண்களும் பெண்களும் சமம் என்று கூறுவார்கள் ஆனால் ஆண்களை விட பெண்கள் மிக உயர்ந்தவர்கள். கல்யாணம் ஆகி வாழுற டைம் மட்டுமல்ல சிறு வயதில் இருந்தே அவர்கள் நிறைய கஷ்டப்படுறாங்க என்று பெண்களை உயர்த்தி பேசினார்.


Advertisement

Advertisement

Advertisement