• Jan 09 2026

விசாலாட்சிக்கு தெரிய வந்த உண்மை- ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் சொன்ன அதிர்ச்சித் தகவல்-Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் , விசாலாட்சி மருமகள்களிடம் அந்த அம்மா எங்கே என்று கேட்கின்றார். அப்போது ரேனுகா போயிடுச்சாம், உங்க பிள்ளைகள் எல்லாம் மொத்தமாக கொண்டு போய் சேர்த்திட்டாங்க என்று சொல்லி அழுகின்றார்.

மறுபுறம் ஈஸ்வரியிடம் பேசும் ஜீவானந்தம் குணசேகரன் செய்த தப்பை வெளியில் கொண்டு வர நம்ம கிட்ட எந்த ஆதாரமும் இல்லை என்கின்றார்.இதனால் ஈஸ்வரி என்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கின்றார்.

அத்தோடு ஜனனி அப்பத்தா சென்ற வண்டி எரிந்த இடத்தில் நின்று அப்பத்தாவின் புடவையை கையில் வைத்து அழுவதோடு அந்த குணசேகரனை சும்மா விடமாட்டேன் என்று சொல்லி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement