தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராகத் திகழ்ந்து வருபவர் எஸ். ஏ. சந்திரசேகர். இவர் இயக்குநர் மட்டுமல்லாது நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராகவும் விளங்கி வருகின்றார். அதுமட்டுமல்லாது இவர் தளபதி விஜய்யின் தந்தை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
நகமும் சதையும் போல் இருந்து வந்த இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து விட்டார்கள். அதாவது விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
இருப்பினும் மகனான விஜய்யுடன் ஏன் இந்த சண்டை என்பது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் பல முறை பேட்டிகளில் பேசிவிட்டார். எஸ்.ஏ. சந்திரசேகரைப் பொறுத்தவரையில் இவர் தான் செய்யும் லேட்டஸ்ட் விஷயங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். அந்த பதிவுகளை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழமை.
அந்த வகையில் தற்போது எஸ்.ஏ.சி தெருவில் இறங்கி ரிக்சா ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விஜய் கண்டுகொள்ளாததால் தான் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
Listen News!