• Apr 27 2024

திடீரென மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்-இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் நடந்துமுடிந்தது.

இவர்கள் திருமணத்திற்கு எல்லா மொழி பேசும் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் வந்திருந்தனர்
இவர்களுடன் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையான் தரிசனம் பெற்றார்கள். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர் .

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் பெற்ற நிலையில் அவர்கள் கோவிலுக்குள் காலணி அணிந்த விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

இதற்கு விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுக்கும் அவசரம் காரணமாக நானும் நயன்தாராவும் காலணி அணிந்திருந்தது உணரவில்லை. கடவுளுக்கும் எந்த அவமரியாதையை செய்யவில்லை. பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருகின்றேன். கவனிக்கத் தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement